முடிவுக்கு வந்த பாத்திய யானையின் வாழ்க்கை! இலங்கை சுற்றுலாத்துறையின் முக்கிய அடையாளம்
குருணாகல் - பொல்பிதிகமவில் உள்ள காட்டுப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த “பாத்திய” என்ற காட்டு யானை இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை உயிரிழந்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக கால்நடை அறிவியல் பேராசிரியர் அசோக தங்கல்ல தலைமையில் “பாத்திய”என்ற காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
30 முதல் 35 வயது மதிக்கத்தக்க “பாத்திய” என்ற காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பாத்திய காட்டு யானை
சிகிச்சை பெற்று வந்த காலத்தில் “பாத்திய” என்ற காட்டு யானை பல தடவைகள் நீர்நிலைகளில் தவறி விழுந்ததால் அதன் உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் கால்நடை வைத்தியர்கள் இணைந்து “பாத்திய” என்ற காட்டு யானைக்கு உணவு அளித்து அதனை பாதுகாத்து வந்த நிலையில் “பாத்திய” இன்றையதினம் காலை உயிரிழந்துள்ளது.

