பெரும்பான்மை கட்டாயம் நிரூபிக்க வேண்டும்! விஜய்க்கு பேரிடியான தமிழ்நாடு ஆளுநரின் பதில்
புதிய இணைப்பு
பெரும்பான்மை ஆதரவை நிரூபித்த பின்னரே முதலமைச்சராகப் பதவியேற்க அழைக்கப்படுவார் என தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் விஜயிடம் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு அமைப்பதில் நிலவி வரும் இழுபறிக்கு மத்தியில், குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மாநிலத்தில் ஒரு நிலையான அரசின் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர், தேவையான பெரும்பான்மை ஆதரவு முறையாக நிரூபிக்கப்படும் வரை அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
Rajendra Vishwanath Arlekar, Governor of Tamil Nadu, has invited Thiru C. Joseph Vijay, President, Tamilaga Vettri Kazhagam, today to Lok Bhavan, Chennai. During the meeting, the Governor explained that the requisite majority support in the Tamil Nadu Legislative Assembly,… pic.twitter.com/57NboyBnWV
— ANI (@ANI) May 7, 2026
மூன்றாம் இணைப்பு
விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில் பதவியேற்புக்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
இரண்டாம் இணைப்பு
தமிழ்நாடு ஆளுநர் தவெகவை ஆட்சியமைக்க இன்னும் அழைப்பு விடுக்காத நிலையில், உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழக வெற்றிக் கழகம் முடிவெடுத்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆளுநரை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆனால், இதுவரை விஜய்யை ஆட்சி அமைக்க ஆளநர் அழைக்காததால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஆட்சி அமைப்பது தொடர்பில் காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் அர்லேக்கருடன் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசவுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றிய போதியலும் 118 இடங்கள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தவெகவுடன் கைகோர்த்ததில் 5 இடங்கள் கிடைத்துள்ளன.
மேலும் 6 இடங்கள் தேவைப்படுவதால், ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்
இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் ஆளுநரை சந்திக்கும் விஜய் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.