எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி தீர்மானம்..! விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு
உலகின் பிரபல சமூக வலைதளங்களின் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் தனது வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் தற்போது அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளது.
டுவிட்டர் நிறுவனத்தை உலகின் முதலாவது பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கியிருந்தார்.
இந்நிலையில், அந்நிறுவனத்தை வாங்கிய உடனே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் ஆகிய நடவடிக்கைகளை எடுத்தார்.
எலான் மஸ்கின் நடவடிக்கைகள்

மேலும் வரும் ஆண்டுகளில் டுவிட்டரில் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான் மஸ்க் முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறு மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் டுவிட்டரில் 50 சதவீத ஊழியர்களை நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செலவுகளை குறைக்க அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பணி நீக்கம்

பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 60 நாட்கள் மதிப்புள்ள பணி நீக்க ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டரில் தற்போது 7,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் சுமார் 3,700 ஊழியர்களை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டுவிட்டரை வாங்கிய நாள் முதல் எலான் மஸ்க் அடுத்தடுத்த அதிரடியை செயல்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 4 மணி நேரம் முன்