சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்ட இருவர் அதிரடி கைது
போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோத வாகன விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாடகை அடிப்படை
கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அனுராதபுரத்தில் வாடகை அடிப்படையில் வான் ஒன்றை பெற்று அதை 1.04 மில்லியன் ரூபாய்க்கும், பொரளையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று அதனை ஒன்பது மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
அத்தோடு, பாணந்துறையில் வாடகை அடிப்படையில் ஒரு காரை பெற்று அதனை 5.8 மில்லியனுக்கு, மொரகஹஹேன மற்றும் வெல்லம்பிட்டியவில் வாடகை அடிப்படையில் இரண்டு கார்களை பெற்று அதனை 5.0 மில்லியனுக்கும், 4.2 மில்லியனுக்கும் விற்பனை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
