யாழ் கடற்பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது!
Cannabis
Arrested
Karainagar
Jaffna-seas
By MKkamshan
யாழ் கடற்பகுதியில் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு 11.30 மணியளவில் ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் கஞ்சாவினை கடத்தி சென்ற வேளை கடமையில் இருந்த கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து 365 கிலோ எடையுடைய கஞ்சா மற்றும் ஒரு படகு என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் காரைநகரை சேர்ந்தவர்கள் என்று கடற்படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் அவர்களை ஊர்காவற்றுறை காவல்துறையினர் முன்னிலைப்படுத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாயுமான தலைவன்…! 4 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி