யாழில் வடமாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இருவர்
யாழில் (Jaffna) வடமாகாண குற்றத் தடுப்பு பிரிவினரால் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் காவல் பிரிவுக்குட்பட்ட யாழ் நகரப் பகுதியில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 40 மற்றும் 54 வயது உடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 27 கிராம் 100 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
