தமிழர் தலைநகரில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்
திருகோணமலை மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடன் இருவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மூதூர் காவல் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
18 வயதுடைய இருவர் கைது
இதன்போது மூதூர் -ஆலிம் நகர் பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போது 18 வயதுடைய நபர் ஒருவரிடமிருந்து 240 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.அத்தோடு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

மேலும் மூதூர் நொக்ஸ் வீதியில் வைத்து ஐஸ் விற்பனை செய்ய தயாராக இருந்த மூதூர் ஆலிம் நகரைச் சேர்ந்த 18 வயதுடைய மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 2 கிராம் 600 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த ஏற்பாடு
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் மூதூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்