நேருக்கு நேர் மோதிக் கொண்ட இரண்டு பவுசர்கள்! சாரதி மற்றும் உதவியாளருக்கு ஏற்பட்ட நிலை
Accident
Trincomalee
Poilce
SriLanka
Kanthalay
By Chanakyan
இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று 2 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டை சந்திப் பகுதியில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் எரிபொருட்களை ஏற்றிச் சென்ற பவுசர்கள் வாகனமொன்றும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற பவுசர்கள் வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் 35 மற்றும் 46 வயது சாரதியொருவரும் உதவியாளர் ஒருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்