மன்னாரில் வெடிபொருளுடன் கடற்றொழிலாளர்கள் இருவர் கைது
மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமைற் வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
அவர்களிடம் மூன்று தொகுதி டைனமைற் வெடி பொருள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களும் மன்னார் கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் எதிர் வரும் ஐந்தாம் திகதி வரை இரு கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

அதே நேரம் கைப்பற்றப்பட்ட டைனமைற்வெடி பொருளை இரசாயன பகுப்பாய்வுக்கு என இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
