கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு இந்திய பிரஜைகள் கைது
arrest
bandaranayake airport
indian nation
By Sumithiran
சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்தியன் ஏர்லைன்ஸ் ஏஐ -273 விமானத்தில் பயணித்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரின் தனிப்பட்ட கைப்பைகளில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.