கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர்கள் இருவர் கைது
Bandaranaike International Airport
India
Sri Lanka Customs
By Jaso
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (04) காலை இந்திய பயணிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவர்கள் கொண்டு வந்த பெருமளவு தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்திய பயணிகள் இருவரும் இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர். இதன்போது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த 09 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
தங்கத்தை வெளியே கொண்டு செல்வதற்கு முயற்சி செய்த
அத்துடன் விமான நிலையத்திலிருந்து தங்கத்தை வெளியே கொண்டு செல்வதற்கு முயற்சி செய்த விமான நிலைய ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்