இஸ்ரேல் அமைச்சர்களுக்கு எதிராக பாய்ந்த பிரித்தானிய தடை: சர்வதேச அரசியலில் கொந்தளிப்பு
பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்குக் கரையில் வன்முறைகளை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இரு இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு எதிராக பிரிட்டன் அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடமார் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் ஆகியோருக்கு பிரிட்டனில் நுழைவு தடை விதிக்கப்பட்டு, அவர்களுடைய சொத்துகள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை வெளிவிவகார செயலர் டேவிட் லாமி நேரடியாக அறிவித்துள்ளார்.
கூட்டு நடவடிக்கை
குறித்த இரு அமைச்சர்களும் பாலஸ்தீனிய சமூகங்களுக்கு எதிரான தீவிர வன்முறைகளையும், மனித உரிமை மீறல்களையும் தூண்டியுள்ளதாக டேவிட் லாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தடை, பிரிட்டன், நோர்வே, கனடா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.
இஸ்ரேல் எதிர்ப்பு
எனினும், இஸ்ரேல் இதனை கடுமையாக கண்டித்துள்ளதோடு, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் இத்தகைய தடைமுறைகள், அரசியல் தலையீடாகவே கருதப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.
ஸ்மோட்ரிசும் பென்-க்விரும், காஸா பகுதியில் மனித அத்தியாவசிய உதவிகளை அனுமதிக்கக் கூட மறுத்துள்ளனர்.
அதேபோல், காஸா பகுதியிலுள்ள பாலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும், அமெரிக்காவின் ஆதரவுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
