நேபாள சகதிக்குள் அதிசயம் - 10 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளி
நேபாள வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையிலிருந்து ஒரு சீன ஆண் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திரிஷூலி நீர்மின் திட்டத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் மற்றொரு நீர்மின் சுரங்கப்பாதையிலிருந்து இரண்டு பேர் அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த மீட்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மீண்டும் மீண்டும் கத்திய
225 மீட்டர் ஆழமுள்ள சுரங்கப்பாதையில் இருந்து நேபாள இராணுவத்தினர் மற்றும் தென் கொரிய பேரிடர் நிபுணர்கள் அடங்கிய கூட்டு மீட்புக் குழு அந்த நபரை மீட்டதாகவும், அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.

உலங்கு வானூர்தி மூலம் அவர் மீட்கப்படுவதும், பயணத்தின் போது இராணுவ மருத்துவ உதவியாளர் ஒருவர் அவரைப் பரிசோதிப்பதும் புகைப்படங்களில் காணப்பட்டன.
மீட்புக் குழுவினரின் விளக்குகளைப் பார்க்கும் போதெல்லாம் தான் மீண்டும் மீண்டும் கத்தியதாகவும், ஆனால் அவர்களால் தன் குரலைக் கேட்க முடியவில்லை என்றும் லூ ஒரு அதிகாரியிடம் பேசும் ஓடியோவை சிசிடிவி பகிர்ந்துள்ளது.
எனினும் இன்று அவர்கள் என்னைக் காப்பாற்றிய போது, என் கண்களுக்கு முன்பாக அந்த ஒளியைப் பாய்ச்சிய போது என்னால் அதை நம்பவே முடியவில்லை என அவர் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது
தேடும் பணிகள்
ஒகஸ்ட் 26 அன்று நேபாள - திபெத் பிராந்தியத்தைத் தாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு, 5,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன ஆயிரக்கணக்கானோரைத் தேடும் பணிகள் மீட்புக் குழுக்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
நேபாள மற்றும் சீன அதிகாரிகள் வெளியிட்ட புள்ளிவிவரங்களை சிஎன்என் ஊடக தரவுகளின் படி, கடந்த வாரம் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,350-ஐத் தாண்டியுள்ளது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21