மத்திய கிழக்கு பதற்றத்துக்கு மத்தியில் கட்டாரின் இராஜதந்திர முயற்சி!
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்தியஸ்த நாடுகள் அமைதியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ள நிலையில், கட்டாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
இன்று லெபனான் பிரதமர் நவாஃப் சலாமுடன் தொலைபேசியில் மத்தியக்கிழக்கு பதற்றம் குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மறுஆய்வு செய்ததோடு, பிராந்தியம் முழுவதும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முயற்சிகள் மற்றும் கூட்டு ஒருங்கிணைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிராந்திய முன்னேற்றங்கள்
சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்ததாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதையும், பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான ஒரு விரிவான உடன்படிக்கைக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு கட்டார் தனது ஆதரவைத் தெரிவிக்கும் என ஷேக் முகமது மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மேலும், லெபனானின் ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கத்தார் தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதோடு, லெபனான் மக்களுடன் தனது தொடர்ச்சியான ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |