கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கியுள்ள இரு புதிய நியமனங்கள்
Government Of Sri Lanka
Senthil Thondaman
Eastern Province
By Pakirathan
நாகராசா மணிவண்ணன், ஏ. மன்சூர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், உள்ளூராட்சி ஆணையாளராக பதவி வகித்த நாகராசா மணிவண்ணனுக்கு உள்ளூராட்சி அமைச்சின் பதில் செயலாளராகவும்,பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) பதவி வகித்த திரு.A. மன்சூருக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராகவும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பரிந்துரை
இவர்களை நியமிக்க பிரதம செயலாளரால் பரிந்துரை செய்யப்பட்டதையடுத்து, அப்பரிந்துரையை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் இருவருக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
