அரச தலைவராக யார் வரவேண்டும் - சம்பிக்கவின் அதிரடி அறிவிப்பு
அரச தலைவராக யார் வரவேண்டும்
இடைக்கால நிர்வாகத்தின் அரச தலைவராக யார் வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது டுவிட்டர் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
சம்பிக்க ரணவக்கவின் கூற்றுப்படி, பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவராக இல்லாத திறமையான தேசிய மட்டத் தலைவர் அல்லது தனது பதவிக்காலத்தில் அரசியல் ரீதியாக பக்கச்சார்பற்றவராக இருக்கக்கூடிய கட்சித் தலைவரே அரச தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என தெரிவித்துள்ளார்.
Political consensus on candidacy for the interim #President has now narrowed down to two propositions: a competent national level leader who is not the leader of any major political party, or a party leader who is likely to remain politically unbiased during his term of office.
— Patali Champika Ranawaka (@pcranawaka) July 11, 2022
பதவிக் கதிரைக்கு போட்டி
மறுபுறம் அநுர குமார திஸாநாயக்கவும் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத் தயார் என அறிவித்துள்ளார்.
அதேவேளை சுயேட்சைக்குழுவினர் அரச தலைவராக டலஸ் அழகப்பெருமவை நியமிக்க தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
