மட்டக்களப்பு வாகரையில் கோரவிபத்து : இரண்டு இளைஞர்கள் பலி
திருகோணமலை கிண்ணியாவில் இருந்து மட்டக்களப்பு ஓட்டமாவடி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாகரை காவல்துறை பிரிவிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்
ஓட்டமாவடி பதுரியா நகர் ஆலையடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என இருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த 6 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிள்களில் சம்பவதினமான நேற்று இரவு கிண்ணியாவுக்கு சென்று அங்கிருந்து ஓட்டமாவடி பகுதியை நோக்கி பயணித்த போது, வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாகரை பனிச்சங்கேணி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தனர்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சடலங்கள்
இதனையடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
