இலங்கையிலுள்ள உக்ரைனியர்களின் நலன் விசாரிக்கும் முக்கியஸ்தர்
srilanka
Udayanga Weeratunga
ukrainian
By Sumithiran
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்து நாடு திரும்ப முடியாமல் உள்ள உக்ரேனியர்களின் நலம் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி உதயங்க வீரதுங்க அளுத்கமவில் உள்ள கிளப் பெந்தோட்ட ஹோட்டலுக்குச் சென்று, தற்போது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் உக்ரைனியர்களின் நலம் குறித்து விசாரித்தார்.
சுற்றுலா வந்த 4000 உக்ரைனியர்கள் இலங்கையில் தற்போது தங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்