திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..! விஜய்யை நெருங்கும் ஆபத்து :உதயநிதியை நாடிய எடப்பாடி
தமிழ்நாடு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத அரசியல் நாடகத்தை அரங்கேற்ற திமுகவும், அதிமுகவும் காய் நகர்த்தி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, திமுக தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும், அதிமுக தங்களது எம்.எல்.ஏ.க்களுடன் ஒருபுறமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு கோரியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரும்பான்மை
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமார் தவெக தலைவர் விஜய், கவர்னர் அர்லேகரை சந்தித்தார்.
ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என கவர்னர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இதனால் எஞ்சிய 6 இடங்களுக்காக விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார்.
திமுக அச்சம்
பொதுவாக யாருக்கும் ஆட்சியமைக்க வேண்டிய பெரும்பாண்மை கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும். யாரும் ஆட்சியமைக்க விரும்பாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும்.

ஆனால் தற்போதைய சூழலில் விஜய் பெரும்பான்மையின்றி தவிக்கும் நிலையில் 2வது பெரிய கட்சியான திமுக, 3வது பெரிய கட்சியான அதிமுக ஆகியவை கூட்டணி ஆட்சிக்கு உரிமை கோரலாம்.
இந்த கூட்டணிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக்கள் உள்ளன. தவெக தலைவர் விஜய் முதல்வராவதையே தடுப்பதே நோக்கம் என்று அதிமுக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதேபோல் விஜய்யின் தவெக ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் எங்கே எம்ஜிஆர் போல் நீண்டகாலம் மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவாரோ? என்ற அச்சம் திமுகவிடம் உள்ளது.
அதிமுக கோரிக்கை
இது திமுக கட்சியின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் திமுகவும், அதிமுகவின் கோரிக்கையை பரிசீலனையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இருப்பினும் விஜய்யால் பெரும்பாண்மை நிரூபிக்க முடியாவிட்டால் தான் இந்த முயற்சியை எடுக்க இருகட்சிகளும் நினைத்துள்ளன.
குறிப்பாக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை எப்படியாவது தங்களுடனே தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று திமுக நினைக்கிறது.
இதனால் தான் தவெக ஆதரவு கோரியுள்ள திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளதோடு கூட்டணியை விட்டு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளதோடு திமுக - அதிமுக கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |