கொரோனாவுடன் வாழ பழகுங்கள் - இங்கிலாந்தில் அடுத்தவாரம் அமுலாகும் புதிய நடைமுறை
கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக அடுத்த வாரம் முதல், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கூறுகையில்,
“ கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட உள்ளன. இதன் மூலம், நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தாத வகையில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது” என்றார்.
இந்த திட்டத்தின் முழுமையான வடிவத்தை நாடாளுமன்றத்தில் திங்கள் கிழமை பொறிஸ் ஜோன்சன் வெளியிடுவார் என்று தெரிகிறது. எனினும், இங்கிலாந்து அரசின் இந்த திட்டம் ஆபத்தானது எனவும் தொற்று பாதிப்பு உயரக்கூடும் எனவும் பலர் எச்சரித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதித்தவர்களை பொது இடங்களுக்கு அனுமதிக்கப் போகும் முதல் நாடாக இங்கிலாந்தே இருக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
