பிரிட்டனில் ஆளும் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல்: பதவி விலகுகிறார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...!
பிரிட்டனில் ஆளும் தொழிலாளர் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நாளை (ஜூன் 22) தனது பதவியிலிருந்து விலகக்கூடும் என பிரிட்டனின் The Observer என்ற பிரபல நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024 பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் ஆனார்.
ஆனால் அரசின் கொள்கைகள் மற்றும் பல்வேறு சர்ச்சைகள் காரணமாக மக்கள் ஆதரவு அவருக்கு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறைந்துள்ள மக்கள் ஆதரவு
தொழிலாளர் கட்சியின் மொத்த எம்பிகளில் கால் பகுதியினர் ஸ்டார்மர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விரிவான பேச்சுவார்த்தைக்கு பிறகு, தான் பிரதமர் பதவியில் நீடிப்பது இனி உகந்ததல்ல என்ற முடிவுக்கு ஸ்டார்மர் வந்துள்ளதாக The Observer தெரிவித்துள்ளது.

எனவே நாளை (திங்கள்கிழமை) அதிகாலைக்குள் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஸ்டார்மர் தனது பதவி விலகல் முடிவை அறிவிக்கலாம் என Observer தெரிவித்துள்ளது
எனினும் அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், "பிரதமர் ஸ்டார்மர் இன்னும் தனது அரசாங்கப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்; அவர் பதவியிலிருந்து விலகும் எண்ணத்தில் இல்லை" எனத் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு
இதேவேளை பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியிலிருந்து விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மிகவும் முக்கியமான இரண்டு விடயங்களான குடிவரவு மற்றும் எரிசக்தி ஆகிய முக்கிய இரண்டு துறைகளில் அவர் மோசமாகத் தோல்வியடைந்துள்ளார் என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ஸ்டார்மருக்குத் தமது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |