படைத்தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடை : அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்பு

Shavendra Silva Anura Kumara Dissanayaka United Kingdom
By Sathangani Apr 01, 2025 03:49 AM GMT
Report

இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர (Jayantha Samaraweera) தெரிவித்தார்.

பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியினர் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன்பாக நேற்று (31) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் குறித்த தடையை நீக்குமாறு வலியுறுத்தி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் - யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்

6 மாதங்களாக கோமாவில் இருந்த பிரதேச செயலர் - யாழ். போதனா வைத்தியசாலையில் மரணம்

நான்கு பேர் மீதான தடை

இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஜயந்த சமரவீர கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உட்பட முன்னாள் இராணுவத் தளபதிகளான சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதற்கு இலங்கை இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் பிரித்தானியா தடை விதித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

படைத்தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடை : அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்பு | Uk Sanctions On Sri Lanka Security Forces

இந்த நாட்டில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை விடுதலைப்புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர். நாட்டுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தையே இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

நாட்டு மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்வதற்கு இராணுவத்தினர் தமது உயிரை பணயம் வைத்து போராடினார்கள். அதனால் தான் ஒட்டுமொத்த மக்களும் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

மிலேச்சத்தனமான விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பையே இராணுவத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர். தமது உயிரை பயணம் வைத்த இராணுவத்தினரையே பிரித்தானியா இன்று வாங்குகிறது.

அதிபர் - ஆசிரியர் சம்பள அதிகரிப்பு : அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிபர் - ஆசிரியர் சம்பள அதிகரிப்பு : அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளி

பிரித்தானிய இராணுவம் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் இன்று இலங்கையின் மனித உரிமைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளார்கள். தடை விதிக்கிறார்கள்.

பிரித்தானியாவின் ஒருதலைப்பட்சமான செயற்பாட்டை தேசிய இனம் என்ற அடிப்படையில் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் முன்னாள் படை பிரதானிகளுக்கு விதித்துள்ள தடையை பிரித்தானியா உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டும்.

படைத்தளபதிகள் மீதான பிரித்தானியாவின் தடை : அடுத்தடுத்து கிளம்பும் எதிர்ப்பு | Uk Sanctions On Sri Lanka Security Forces

பிரித்தானிய அரசாங்கத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் தலைக்குனிந்துள்ளமைக்காக ஒட்டுமொத்த இலங்கையர்களும் தலைகுனிய போவதில்லை.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் மீது கைவைப்பதற்கு இலங்கையின் இறையாண்மையை நேசிக்கும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை. எமது உயிரை பணயம் வைத்தேனும் எமது இராணுவத்தினரை பாதுகாப்போம்“ என தெரிவித்தார்.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் - கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் - கல்வி அமைச்சின் அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024