இலங்கை பயணமாகும் பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து பிரித்தானியா, தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் பயண ஆலோசனையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் அந்த நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பிரித்தானியா எச்சரித்துள்ளது.
இறக்குமதி செய்வதற்கான கொடுப்பனவு செலுத்த முடியாத நிலைமையை இலங்கை எதிர்நோக்கியுள்ளதாக பிரித்தானியா, தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண ஆலோசனையில் கூறியுள்ளது.
பலசரக்கு கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம் எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மின்சார உற்பத்திக்கான நெருக்கடி காரணமாக சூழற்சி முறையில் அதிகாரிகள் மின்வெட்டை நடைமுறைப்படுத்தலாம் எனவும் பிரித்தானியா, தமது பிரஜைகளுக்கான பயண ஆலோசனையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
