ஒலிம்பிக் கால போர் நிறுத்தம்: போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் ஆதரவு
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற போப் ஆண்டவரின் அழைப்பிற்கு உக்ரைன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில், உலக அமைதியை வலியுறுத்திப் போப் பிரான்சிஸ் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படை
ஒலிம்பிக் திருவிழாவின் போது வன்முறைகளைத் தவிர்த்து, மனிதாபிமான அடிப்படையில் அமைதிக்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான முயற்சிகளையும் தாங்கள் வரவேற்பதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து இதுவரை எவ்விதத் தெளிவான தகவல்களும் வெளிவரவில்லை என சர்வதேச ஊடகங்கள் செ்யதி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, இக்கோரிக்கையை ரஷ்யா ஏற்குமா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுகின்து.
நாடுகளுக்கிடையிலான நட்புறவை வளர்க்கும் தளமான ஒலிம்பிக் போட்டிகளின் போது மேற்கொள்ளப்படும் இப்போர் நிறுத்தம், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போப் ஆண்டவரின் இந்த அமைதி முன்னெடுப்புக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 13 மணி நேரம் முன்