ரஷ்ய ஆயுத தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கிய உக்ரைன் ட்ரோன்கள்
உக்ரைன் (Ukraine) படைகள், ரஷ்யாவின் (Russia) முக்கிய ஆயுத உற்பத்தி மையங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மாஸ்கோவிற்கு (Moscow) அருகில் உள்ள டுப்னா நகரத்தில் இயங்கும் கிரான்ஸ்டாட் ட்ரோன் உற்பத்தி மையம், மற்றும் கிரூஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் ரடுகா தொழிற்சாலை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மாஸ்கோ பகுதியிலுள்ள ஏங்க்ஸ்டிரெம் மைக்ரோசிப் தொழிற்சாலையும் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை, ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளை உருவாக்குகிறது.
ஆயுத நிலைகள் மீது தாக்குதல்
2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து இன்று வரை போராடி வருகிறது.
இந்த நிலையில், நேற்று (28.05.2025) உக்ரைன் படைகள், ரஷ்யாவின் முக்கிய ஆயுத உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
வான்வழி பாதுகாப்பு
மேலும் உகரைனின் இந்த தாக்குதலுக்கு எதிராக தங்கள் வான்வழி பாதுகாப்பு படைகள் 296 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவானோவோ பகுதியில் உள்ள கெமிக்கல் மற்றும் வெடிகுண்டு சேர்க்கை தொழிற்சாலையும் ஒரு நாளுக்கு முன்னர் வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்களில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைப்பு (SBU) உறுதிபடுத்தியுள்ளது. உகரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் இல்லை என்பதால், இயந்திரமயமான ட்ரோன் தாக்குதல்தான் முக்கிய ஆயுதமாக பயன்படுகிறது.
இதேவேளை, ரஷ்யாவும் 900-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் மீது கடந்த மூன்று நாட்களில் ஏவியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
