ரஷ்யா படைகளை பின்வாங்கவில்லை - போர் பதற்றம் நீடிப்பு - அமெரிக்கா அறிவிப்பு
உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற ரீதியில் என சர்வதேச ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த ராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்யா நேற்று செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில், இந்த தகவலை அமெரிக்க தரப்பு மறுத்துள்ளது. ரஷ்யா படைகளை பின்வாங்கவில்லை என்றும் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன் கூறுகையில், “உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் இல்லை.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம். அதற்கான படைகளை உக்ரைன் எல்லையில் ரஷ்யா தயார் நிலையிலேயே வைத்துள்ளது. அமெரிக்கா எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது.” என தெரிவித்தார்.
