புடினுக்கு முக்கிய அழைப்பை விடுத்துள்ள உக்ரைன் அரச தலைவர்
ஜெருசலேமில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ரஷ்ய அதிபர் புடினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யா முன்னெடுத்துள்ள போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஆனாலும், பெரும்பாலான உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்து வருகின்றன.
இந்நிலையில், நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ரஷ்ய அதிபர் புடினுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஜெலன்ஸ்கி புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் நப்பதலி பெனெட்டை மத்தியஸ்தம் செய்ய ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.