ரஷ்யாவின் பேரிழப்பு: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சிகர அறிக்கை
உக்ரைன் மீது நடைபெற்ற படையெடுப்புக்கு பின்னர், ரஷ்யாயின் மனித இழப்புகள் தற்போதைய நிலவரப்படி ஒரு மில்லியனை நெருங்குகின்றன என்று உக்ரைனிய இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ஆயுதப் படைகளின் பொது பணியாளர் குழுவின் அறிக்கையின்படி, தற்போது வரை 9,98,080 ரஷ்ய வீரர்கள் போரிடும் திறனை இழந்துள்ளனர்.
இதில், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்டவர்கள் போன்ற அனைத்து வகையினரும் சேர்க்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ரஷ்யாவுக்கான பெரும் சவால்
அத்துடன், ரஷ்யாவின் இராணுவ தளவாட இழப்புகளும் பாரியளவில் பதிவாகியுள்ளன.
உக்ரைன் தரவுகளின்படி: சுமார் 11,000 டாங்கிகள், 40,000 ட்ரோன்கள், 30,000 பீரங்கி அமைப்புகள் என முக்கியமான தளவாடங்கள் இழக்கப்பட்டுள்ளன.
இந்த எண்ணிக்கைகள், போர் நிலவரத்தின் கடுமையையும், ரஷ்ய படைகள் சந்தித்து வரும் பெரும் சவால்களையும் வெளிப்படுத்துகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
