ரஷ்ய படைகளால் கடத்தப்பட்டார் உக்ரைன் நகரின் முக்கிய பிரமுகர்- வெளியான காணொளியால் பதற்றம்!
ரஷ்ய படைகளுக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததால் மெலிடோபோல் நகர மேயர் இவான் ஃபெடோரோவை 10 நபர்கள் கொண்ட ரஷ்ய இராணுவ படை கடத்தி சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா தனது படையெடுப்பை மூன்றாவது வாரமாக உக்ரைனில் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது ரஷ்ய இராணுவ படையால் உக்ரைனின் மெலிடோபோல் நகர் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்திடம் மெலிடோபோல் நகரை சரணடைய வைப்பதற்கு ஒத்துழைப்பு தர மறுத்த அந்த நகரின் மேயர் இவான் ஃபெடோரோ அவசரகால மையத்தில் இருந்து 10 நபர்கள் கொண்ட ரஷ்ய இராணுவ குழுவால் கடத்தி செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மக்களை துணிச்சலுடன் பாதுகாத்து வந்த மேயர் இவான் ஃபெடோரோ ரஷ்ய இராணுவ வீரர்களால் கடத்தப்பட்டுள்ளார்.
100 சதவிகிதம் ஜனநாயகத்தை கடைபிடிக்கும் எந்தவொரு நாட்டு மக்களுக்கும் இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது தெரியும். ரஷ்யா ஜனநாயத்திற்கு எதிராக உக்ரைனின் உள்ளூர் அதிகாரியை அவரது பதவியில் அகற்ற முயற்சித்திருப்பது ரஷ்யாவின் அடுத்தகட்ட பயங்கரவாதத்தை எடுத்துரைக்கிறது.
மேயர் இவான் ஃபெடோரோ கடத்தப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான மிகப்பெரிய போர் குற்றமாகும் என தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்ய இராணுவ வீரர்களின் இந்த செயல் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல்களோடு ஒத்துப்போவதாக உள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
The mayor of #Melitopol Ivan Fedorov was kidnapped, said Anton Gerashchenko
— NEXTA (@nexta_tv) March 11, 2022
According to him, Fyodorov refused to cooperate with the Russian military occupying the city. He was detained at the city crisis center, where he was in charge of the city's life support. pic.twitter.com/mCzfCzDWzQ