நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல்? பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஜெலன்ஸ்கி!
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா, உக்ரைன் மீது தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது.
முக்கிய நகரங்கள் மீது குண்டுகளை வீசித் தகர்த்து வருகின்றது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை தாங்கள் கைவிட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்து விட்ட போதிலும் ரஷ்யா தாக்குதலை நிறுத்தவில்லை.
இந்தநிலையில் போலந்து எல்லை அருகே உள்ள உக்ரைன் இராணுவ தளம் மீது ரஷ்யா விமான தாக்குதலை நடத்தியது.
இந்தநிலையில் போலந்து எல்லை அருகே ரஷ்யா தாக்குதல் நடத்தியதால் நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நீங்கள் எங்கள் வான் எல்லையை மூடாவிட்டால் நேட்டோ குடிமக்களின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
போலந்து எல்லையையொட்டி வான் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இதனால் நேட்டோவில் உள்ள உறுப்பு நாடுகள் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்குதலில் ஈடுபடலாம். இதனால் நேட்டோ இனியாவது கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
