ஐரோப்பாவின் அணுமின் நிலையம் மீதான தாக்குதலையடுத்து உக்ரைன் கடலில் மூழ்கியது நேட்டோ உறுப்பு நாட்டின் கப்பல்!
உக்ரைன் அணுமின் நிலையம் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதையடுத்து உக்ரைன் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாமா கொடியிடப்பட்ட கப்பல், எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட விஸ்டா ஷிப்பிங் முகவரகத்துக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எஸ்டோனியாவுக்கு சொந்தமான சரக்குக் கப்பலொன்று வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் உக்ரைன் கடற்பகுதியில் மூழ்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
அந்தக் கப்பலில் இருந்த குழுவின் இரண்டு உறுப்பினர்கள் ஒரு உயிர்காக்கும் படகில் தப்பியதாகவும், நான்கு பேரைக் காணவில்லை என்றும் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஆறு பேரும் உக்ரேனிய உள்ளூர் மீட்பு சேவையால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால்டிக் நாடான எஸ்டோனியா நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. மற்றும் ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது.
பல நாட்களுக்கு முன்பு ஒடேசாவுக்கு அருகிலுள்ள சோர்னோமோர்ஸ்க் என்ற தெற்கு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட பின்னர் கப்பல் உக்ரைன் கடற்கரையில் நங்கூரமிடப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.