யுத்த சத்தத்தால் அதிரும் உக்ரைன்- எல்லைப் பகுதிக்கு விரையும் பைடன்!
உக்ரைன் மீது ரஷ்யா 27 ஆவது நாளாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இவ்வாறான நிலையில், கடந்த சில தினங்களாக ஹைப்பர்சோனிக் உள்ளிட்ட பயங்கரமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
இதன் காரணமாக உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் போலந்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேட்டோ நாட்டு தலைவர்கள், ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ படைன் அடுத்த வாரம் பெல்ஜியம் செல்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப் பயணத்தின் போது எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேட்டோ நாடான போலந்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
போலந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். போலந்து செல்லும் ஜோ பைடன் அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரிசெஜ் டுடாவை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து பயணத்தின் போது, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் நெருக்கடி குறித்த சர்வதேச நாடுகள் பதில் அளிப்பது என்பது குறித்து விவாதிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.