உக்ரைனின் முக்கிய நகரங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ரஷ்ய படைகள்!
உக்ரைனின் மரியுபோல் நகர் மீது ரஷ்யா பார்வையை பதித்தது. அதன் காரணமாக போர் தொடுத்த நாள் முதல் ரஷ்ய படைகள் அங்கு முற்றுகையிட்டன.
அந்நகரின் மீது ஏவுகணை தாக்குதலும், குண்டுவீச்சுத் தாக்குதலும் நடத்தி பெரும்பாலான கட்டடங்களை சேதப்படுத்தி உருக்குலைய வைத்தது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு அளிக்கும் எனவும் உக்ரைன் அரசாங்கத்திற்கு 150 மில்லியன் டொலர்கள் நிதி உதவியாக வழங்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கி குண்டுகள், ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை நான் அறிவிக்கிறேன் எனவும் அண்மையில் அமெரிக்க அதிபர் அறிவித்திருந்தார்.
இவ்வாறு மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு, உக்ரைன் படையினர் ரஷ்யாவை எதிர்த்து போராடி வருகின்றனர்.
உக்ரைன் வடகிழக்கு பகுதியில் இருந்த 2 முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்ய படைகளை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் உக்ரைன் கிழக்கு பகுதியை தமது கட்டுக்குள் கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.