அதிகரிக்கும் பதற்ற நிலை - கனடா எடுத்துள்ள முடிவு
உக்ரைன் மீதானா ரஷ்யாவின் நடவடிக்கைகள் ‘ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ என்று குறிப்பிட்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ( Justin Trudeau), முதல் சுற்று பொருளாதார தடையினை விதித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனின் பிரிவினைவாத பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகியவற்றிற்கு 'சுதந்திரத்தை' அங்கீகரிப்பதாக அறிவித்ததை அடுத்தே, ரஷ்யாவிற்கு எதிராக கனடா இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
இதுகுறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மற்றும் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாகும்.
இது ஒரு இறையாண்மை அரசின் மீதான படையெடுப்பு ஆகும். இதனால் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, கனடா முதல் சுற்று பொருளாதார தடை விதித்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.
Russia’s illegal actions in Ukraine are an attack on democracy – and a threat to peace around the world. Make no mistake: This is a further invasion of a sovereign state. In coordination with allies and partners, Canada is responding with a first round of economic sanctions.
— Justin Trudeau (@JustinTrudeau) February 23, 2022