உத்தரவாதம் வழங்கப்படாத ரஷ்யாவின் போர்நிறுத்தம்- மனிதாபிமான வழித்தடம் முடிவடையும் ஸபோரிஸியாவிலும் சண்டை!
போர்நிறுத்தம் நாளையும் தொடரும் என்பதற்கு ரஷ்ய தரப்பிலிருந்து தங்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என மரியுபோல் துணை மேயர் செர்ஹி ஓர்லோவ் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான வழித்தடம் முடிவடையும் ஸபோரிஸியா பகுதியில் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் நகர சபை கூறியது.
இந்நிலையில், முழு வெளியேற்றும் பாதையிலும் தற்காலிக போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்த உக்ரேனிய அதிகாரிகள் ரஷ்ய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் இரவு முழுவதும் நடந்தன. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் சில மணிநேரங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. உக்ரைன் நேரப்படி காலை 9 மணிக்கு போர் நிறுத்தம் தொடங்குவதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.
அதனையடுத்து உடனடியாக மக்களை வெளியேற்ற முயற்சித்தோம். நாங்கள் 50 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் 5 6,000 பேர் ஸாபோரிஸியாவிற்கு பேருந்தில் செல்லலாம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அதேவேளை தனியார் காரில் கூட மக்கள் வெளியேறலாம். போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தால் மொத்தம் 7 9,000பேர் பேருந்து மற்றும் தனியார் காரில் தப்பிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
ரஷ்ய துருப்புக்களால் ரயில் பாதை உட்கட்டமைப்பு அழிக்கப்பட்டதால் ரயில்கள் ஓடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.