உக்ரைனின் கொடூர யுத்தத்தில் இராஜாங்க உறவில் தொடங்குகிறது புதிய நாள்- ஆயுதங்களை வழங்கும் பிரான்ஸ்?
உக்ரைனுக்குள் முன்னேறி வரும் ரஷ்ய துருப்புக்களுடன் போரிட, பிரான்ஸ் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,
உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க பிரான்ஸ் முன்வந்துள்ளது. பிற நாடுகள் உடனான உக்ரைனின் இராஜாங்க உறவில் இன்று புதிய நாள் தொடங்கி உள்ளது. ரஷ்யாவின் போருக்கு எதிராக கூட்டணி நாடுகள் செயல்பட தொடங்கின.
உக்ரைனுக்கு இராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய இராணுவம் உக்ரைனின் இராணுவ உட்கட்டமைப்பை, விமானம் மற்றும் கடல் சார்ந்த ஏவுகணைகள் மூலம் குறிவைத்துள்ளதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘இரவில், ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகள், உக்ரைனின் இராணுவ உட்கட்டமைப்பிற்கு எதிராக வான் மற்றும் கடலில் இருந்து ஏவக் கூடிய கப்பல் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நீண்ட தூர துல்லியமான ஆயுதங்களுடன் மோதலைத் தொடங்கின’ என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.