உக்ரைன் அதிபரை ரஷ்யாவிடம் சரணடையக் கூறிய இஸ்ரேல்? பதிலடி கொடுத்த ஜெலன்ஸ்கி!
உக்ரைன் அதிபர் சரணடைந்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனை ரஸ்ய படைகள் ஆக்கிரமித்த பின்னர், அதிபர் புடினை, சந்தித்த முதல் உலகத் தலைவர், இஸ்ரேலிய பிரதமராவார். இதன்போதே போரை நிறுத்தவேண்டுமானால், உக்ரைனிய அதிபர் சரணடையவேண்டும் என்ற நிபந்தனையை புடின் விதித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உக்ரைனிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பென்னட்டுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலின் போது புடினின் இந்த நிபந்தனை கூறப்பட்டதாக அமெரிக்க செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனவே மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக புடினின் நிபந்தனைகளை ஏற்குமாறு அதிபர் ஸெலென்ஸ்கியிடம் இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் கூறியதாக உக்ரைனிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் உக்ரைன் அதிபர் அதற்கு தயாரில்லை என்றும் உக்ரைனிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்தக் கருத்தை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உக்ரைனிய அதிபர் தமது நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் செய்தியை வழங்கியுள்ளார்.
இராணுவம் "ஒரு மூலோபாய திருப்புமுனையை அடைந்துள்ளது", அது ரஸ்ய படையெடுப்பிற்கு எதிராக வெற்றிபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “ஆக்கிரமிப்பாளர்களின் சண்டை விரைவில் முடிவடையும்" என்று எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனிய நிலத்தை விடுவிக்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்று கூற முடியாது. ஆனால் நாங்கள் அதைச் செய்வோம் என்றும் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Ukraine's President Volodymyr Zelenskiy said the country was ‘moving towards victory’ in war with Russia and urged Ukrainians to sow as many crops as possible this spring despite the invasion https://t.co/F8yIJyVFAa pic.twitter.com/ktoQ1TKb1Y
— Reuters (@Reuters) March 11, 2022