உக்ரைனியர்கள் சரணடைய ரஷ்யப் படை காலக்கெடு!
russia
army
ukraine
war
By Thavathevan
உக்ரைன் தென்கிழக்கு நகரங்களில் இருக்கும் உக்ரைனியர்களை அதிகாலை ஐந்து மணிக்குள் சரணடையுமாறு ரஷ்யப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்பவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மரியுபோல் நகரிலுள்ள உக்ரைன் இராணுவத்தினர் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்ற ரஷ்ய படையினர் விடுத்திருந்த எச்சரிக்கையை உக்ரேனிய அதிகாரிகள் நிராகரித்தனர்.
ரஷ்யாவின் இறுதி எச்சரிக்கைகளுக்கு, உக்ரைன் ஒருபோதும் அடிபணியாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி