ரஷ்யாவுக்கு பேரிடி! முக்கிய கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
சைபீரியாவின் உட்பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதலால் ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையம், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து சுமார் 2,700 கி.மீ (1,700 மைல்கள்) தொலைவிலும், கஜகஸ்தானுடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகிலும் அமைந்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்
உக்ரைன் இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலான ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் அழித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Credit: www.pravda.com.ua
இதேவேளை, குறித்த தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாகவும் ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும், சுத்திகரிப்பு ஆலைக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |