மக்களிடம் மன்னிப்பு கோரினார் பாடகி உமாரா
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது தேசிய கீதத்தை பாடிய விதத்தில் தான் கவனம் செலுத்தியதாக பாடகி உமாரா சின்ஹவன்ச தெரிவித்துள்ளார்.
தான் பாடியதால் யாரேனும் காயப்பட்டாலோ அல்லது புண்படுத்தப்பட்டாலோ அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல

இதேவேளை லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் ஆரம்ப விழாவில் தேசிய கீதத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாடகி உமாரா சின்ஹவன்சவின் சகோதரி கருத்து தெரிவித்துள்ளார்.
“இன்று நாட்டில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும், தற்போது சமூக வலைத்தளங்களில் தனது சகோதரி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசபக்தியுடன் கூடிய

தனது சகோதரி நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது பல விருதுகளை வென்றது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இசைத் துறையில் தனது பங்களிப்பு மற்றும் தனது சகோதரி தேசபக்தியுடன் கூடிய நல்ல இதயம் கொண்டவர்” என்று கூறுகிறார்.
இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.