கனிம வள மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்குத் தடை: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி
கனிம வளங்களை மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ககபபட்டுள்ளது.
குறித்த விடயத்தை கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அகழ்வுப் பணிகள்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் கனிம வளங்கள் தொடர்பான அகழ்வாராய்ச்சி, அகழ்வுப் பணிகள், பதப்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு மேலதிக பெறுமதி சேர்த்தல் (Value Addition) ஆகிய ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் உள்ளடக்கியதாக இந்த புதிய கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் தேசிய கனியவளக் கொள்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது எனினும் தற்போதைய நவீன காலத்திற்கும் நாட்டின் பொருளாதாரத் தேவைகளுக்கும் பொருத்தமான வகையில் 27 வருடங்களின் பின்னர் அது முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட்டு புதிய திருத்தங்களுடன் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான கொள்கையை நாம் சமர்ப்பித்துள்ளோம்.
நாட்டில் கனிம வளங்களை அகழ்வாராய்ச்சி செய்வதற்காக கடந்த காலங்களில் 471 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவற்றில் வெறும் 8 இடங்களில் மட்டுமே உண்மையான அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள்
தற்போது 12 அனுமதிப்பத்திரங்கள் மட்டுமே செல்லுபடியாக உள்ள நிலையில் அவற்றில் ஆறு மதிப்பத்திரங்கள் லங்கா மினரல்ஸ், கஹட்டகஹ சுரங்கம், போகல மற்றும் எப்பாவல பொஸ்பேட் போன்ற அரச நிறுவனங்களின் வசமே காணப்படுகின்றன.

அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காத நிலைமை இனி அனுமதிக்கப்படாது.
இதுவரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து கனிம வளங்கள் வெறும் மூலப்பொருட்களாகவே (Raw Materials) வெளிநாடுகளுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
கனிம வளங்கள்
இதனால் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய பெருமளவிலான வருமானம் இல்லாது போனது எனினும் இந்த புதிய கொள்கையின் கீழ் இனிவரும் காலங்களில் கனிம வளங்களை வெறும் மூலப்பொருட்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.
அவற்றுக்கு இலங்கையிலேயே மேலதிக பெறுமதி சேர்த்த பின்னரே புதிய திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொள்கைத் திட்டத்தை உருவாக்குவதற்காக சுற்றாடல் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சகம் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் இன்றியமையாதது என்பதால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தேசிய கனியவளக் கொள்கை 2026 ஐ விரிவாக ஆராய்ந்து இதற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்