தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறாத சிறிலங்கா- விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

army crime war parliament united kingdom sri Lanka
By Kalaimathy Jan 18, 2022 10:28 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய அரசியல் பிரபலங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குரூரங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பிரித்தானிய தமிழ்சமூக அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்தநிகழ்வில் ஆளும் கட்சியான கென்சவேட்டிவ் கட்சி எதிர்க்கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயக்கட்சி ஆகிய எதிர்கட்சிகளும் பங்கெடுத்திருந்தன.

தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்டிருப்பதால் பிரித்தானிய அரசியல்வாதிகள் மனித உரிமைகளுக்காகப்போராட வேண்டும் எனவும் சிறிலங்காவின் அதிகாரிகளை இலக்கு வைத்து மெக்னிட்ஸ்கி தடைகளை விதித்து சிறிலங்காவுக்கு கடுமையான செய்திகளை சொல்ல வேண்டிய நேரமும் இதுவென லிப்டெம் கட்சி தலைவர் எட் டேவி குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர், எலியட் கோல்பர்ன் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கவேணடும் என வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது, தொழிற்கட்சியின் ஈழத்தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கபடுமென்ற உறுதிமொழியை நிழல் வெளியுறவு அமைச்சர் டேவிட் லமி வழங்கினார்.     

இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இன்று வரை சிறிலங்கா தரப்பில் பொறுப்புக் கூறப்படவில்லையென்பதால் நீதிக்காக தொழிற்கட்சி எப்போதும் தமிழர்களுடன் துணைநிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பாவி, மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமென சிறிலங்கா அரசாங்கததை கோரியதோடு, சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இலஙகையில் ராஜபக்சக்களின் மீள்வருகையானது அந்த தீவின் எதிர்காலத்திற்கு பாதகமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.   

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020