யுனிவர்சல் சுவாச தடுப்பூசி: இலங்கையில் பிறந்த புலேந்திரன் தலைமையிலான குழுவால் கண்டுபிடிப்பு
இலங்கையில் பிறந்த முன்னணி நோய் எதிர்ப்பு மண்டல ஆய்வாளர் பாலி புலேந்திரன் (Bali Pulendran) தலைமையிலான Stanford University School of Medicine மருத்துவ ஆராய்ச்சி குழு, பல்வேறு சுவாசத் தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும் “யுனிவர்சல்” (Universal) தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தடுப்பூசி, ஒரே ஒரு வைரஸை மட்டும் இலக்கு வைக்காமல், பல்வேறு சுவாச வைரஸ்களுக்கும் எதிர்ப்பு சக்தி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய தடுப்பூசிகள் குறிப்பிட்ட வைரஸ் மாறுபாடுகளுக்கே பாதுகாப்பளிக்கின்றன.
இயற்கை நோய் எதிர்ப்பு
ஆனால், இந்த “யுனிவர்சல்” தடுப்பூசி உடலின் இயற்கை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நீண்டகால பாதுகாப்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பகட்ட ஆய்வுகளில் இது வலுவான நோய் எதிர்ப்பு செயல்பாட்டை தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சுவாச வைரஸ்களுக்கும் எதிராக பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு, உலகளாவிய அளவில் சுவாசத் தொற்றுகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மனிதர்களில் விரிவான பரிசோதனைகள் மற்றும் கட்டுப்பாட்டு அங்கீகாரங்கள் கிடைத்த பின், இது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |