வெளிநாடொன்றில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு : பலர்பலி
Shooting
World
By Jaso
செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் அமைந்துள்ள பிராகா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பிரான்ஸ் 24 செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
11 பேர் சம்பவ இடத்தில்
"துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் உட்பட 11 பேர் சம்பவ இடத்தில் இறந்துள்ளனர் என்று என்னால் கூற முடியும்" என்று அவசர சேவை செய்தித் தொடர்பாளர் ஜனா போஸ்டோவா செக் தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு சீல்
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுப்புற வீதிகளை விட்டு வெளியேறுமாறும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும் காவல்துறையினர் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு (படங்கள்)
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்