பேராதனை பல்கலை மாணவர்களிடையே மோதல்! பகிடிவதையால் வந்த வினை
பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி கற்கும் மாணவர்களிடையே பகிடிவதையால் நேற்று (14) மோதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு ஆதரவான மற்றும் எதிரான இரு மாணவர் குழுக்களிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டபீடத்தில் இரண்டாம் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குவதாகவும் பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
நேற்று (14) மாலை பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், 30 பேர் கொண்ட மாணவர்கள் குறித்த நான்கு மாணவர்களையும் தாக்குவதற்கு வருகைத் தந்துள்ளதாகவும் இவர்கள் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதைனை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)