ஐ.தே.க. தேசிய அமைப்பாளராக சாகல ரத்நாயக்க நியமனம்
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, ஐக்கியதேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
மேற்படி நியமனம் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கு கட்சியின் செயற்குழுவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சாகல ரத்நாயக்கவை தேசிய அமைப்பாளராக நியமிப்பதற்கான தீர்மானம் கட்சியின் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்கவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், திஸாநாயக்க அந்த பதவியை ஏற்க மறுத்ததன் காரணமாக சுமார் ஒரு வருட காலமாக அப்பதவி வெற்றிடமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சாகல ரத்னாயக்கவை குறித்த வெற்றிடத்திற்கு நியமிப்பது குறித்து கட்சியின் செயற்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டதுடன் அத்தீர்மானத்திற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
சாகல ரத்நாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்தவர் என்றும் அவரது வெற்றிடத்துக்கு இருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அந்த வெற்றிடங்கள் எதிர்காலத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துடன் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
