மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
மன்னார் (Mannar) மதஸ்தலம் ஒன்றில் அமைந்திருந்த சுகாதார சீர்கேடான உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பல்வேறு குறைபாடுகளுடனும் இயங்கி வரும் உணவகங்கள் வெதுப்பகங்கள் மீது தொடர்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த நடவடிக்கையை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகரசபை சுகாதார குழுவினர் இணைந்து பல்வேறு மேற்கொண்டு வருகின்றனர்.
அசுத்தமான முறை
இந்த நிலையில் மன்னார் மூர் வீதியில் மதஸ்தலம் ஒன்றிணுல் இயங்கி வந்த உணகம் ஒன்று இவ்வாறு ஆய்வுகுட்படுத்தப்பட்டுள்ளது.
நகரசபை சுகாதர உத்தியோகஸ்தரினால் மேற்கோள்ளப்பட்ட இந்த ஆய்வு நடவடிக்கையின் போது பல்வேறு குறைபாடுகளுடன் குறித்த உணவகம் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, தலையுறை, கையுறை அணியாமை, அதிகளவான இளையான்கள், கழிவு நீர் உரிய முறையில் அகற்றப்படாமை, அசுத்தமான முறையில் உணவுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை மற்றும் அசுத்தமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டமை போன்ற பல்வேறு குறைபாடுகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்
இதையடுத்து, குறித்த உணவகம் மீது சட்ட நடவடிக்கை மேற்கோள்ளப்பட்டுள்ளது.
தொடர்சியாக மன்னார் நகரசபை பகுதிக்குள் இயங்கி வரும் உணவகங்கள் தொடர்பில் பல்வேறு முறைபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தொடர்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது இயங்கிவரும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





