2026 நடைபெறவுள்ள பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர்தர மற்றும சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்ட திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டதாகவும், அதன்படி மாணவர்கள் உரிய திகதிகளின் படி தங்கள் படிப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அறிவிக்கப்பட்ட திகதிகள்
கடந்த காலங்களில் சில காரணங்களால் பரீட்சை திகதிகளில் மாற்றம் ஏற்பட்டதால், மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகவும், எனவே இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளில் பரீட்சைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகளின் மதிப்பீடுகள், ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறும் என்றும், அதன் முதல் கட்ட மதிப்பீடு நிறைவடைந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட மதிப்பீடு இன்று (01) தொடங்கும் என்றும் மதிப்பீட்டின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 30 முதல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை, ஓகஸ்ட் 9 ஆம் திகதியும் உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் சாதாரண பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்