மூன்றாம் உலக போருக்கான அத்திவாரம் : ஐரோப்பிய நாடுகளின் அதிரடி நடவடிக்கை
மூன்றாம் உலகப் போருக்கான ஆயத்த நடவடிக்கைகளை மொத்த ஐரோப்பிய நாடுகளும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, ரஷ்ய படையெடுப்பில் இருந்து தப்பிக்க கட்டாய இராணுவச் சேர்க்கை திட்டங்களும் முன்மொழியப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோவை வெளியேற்றி ரஷ்ய சாம்ராஜ்யத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒரு போரில் விளாடிமிர் புடின் (Vladimir Putin) சில ஆண்டுகள் தொலைவில் உள்ளார் என்ற அச்சமே ஐரோப்பா கண்டத்தை அவசர அவசரமாக வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியம்
உக்ரைன் போரில் விளாடிமிர் புடின் வெற்றி பெற்றால், 2030 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ரஷ்யா (Russia இன்னொரு போருக்கு தயாராகக் கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புகிறது.
அத்தோடு, ரஷ்யாவுடன் ஒரு பெரிய அளவிலான போருக்கு ஐரோப்பிய நாடுகள் தயாராக வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களை ஒரு கொடூரமான போருக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளை ரகசியமாகத் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளுடன் இணைய பிரித்தானியாவுக்கும் (United Kingdom) அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், படையெடுப்புகளில் இருந்து தப்பிப்பிழைப்பது எப்படி என்பது குறித்து தனது குடிமக்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடும் சமீபத்திய நாடாக பிரான்ஸ் (France) மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
20 பக்கங்களைக் கொண்ட இந்த சிறு புத்தகம், படையெடுப்பை எதிர்கொண்டு குடியரசை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பிரெஞ்சு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கும் என குறிப்பிடப்படுகின்றது.
பாதுகாப்பு முயற்சி
இதில், துணைப் படைகள் அல்லது உள்ளூர் பாதுகாப்பு முயற்சிகளில் சேரவும் கோரப்பட்டுள்ளதுடன் ஆறு லிற்றர் தண்ணீர், பதப்படுத்தப்பட்ட உணவு, பேற்றரிகள் மற்றும் அடிப்படை மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் உயிர்வாழும் கருவியை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த உதவிக்குறிப்புகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பிரான்சின் அணு ஆயுதங்களின் பாதுகாப்பு அரணில் ஜேர்மனி (Germany) கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், பிரான்ஸ் பதிலடி அளிக்கும் என தெரிவிக்கப்படுவதுடன் போலந்தும் (Poland) தற்போது பிரான்சின் பாதுகாப்பு வட்டத்தைக் கோரியுள்ள நிலையில், பிரான்சும் அனுமதி அளிக்கும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா (United States) அல்லது பிரான்சின் பாதுகாப்பு வளையத்தில் இருக்கவே போலந்து திட்டமிட்டு வருகின்றது.
பால்டிக் மற்றும் நோர்டிக் நாடுகள் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தலை நன்கு அறிந்திருக்கின்றன ஏனெனில் அவை அனைத்தும் ஏற்கனவே ஏதோ ஒரு வகையான கட்டாய இராணுவ சேவையை நடைமுறையில் கொண்டுள்ளன.
மூன்றாம் உலகப் போர்
ஜேர்மனியின் மூன்றாம் உலகப் போர் தயாரிப்புத் திட்டங்கள் ஏற்கனவே 1,000 பக்க ரகசிய ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
2022 முதல் உக்ரைனில் (Ukraine) புடின் கட்டவிழ்த்துவிட்ட அட்டூழியங்களைக் கண்ட பிறகு, ஸ்வீடனும் (Sweden) பின்லாந்தும் (Finland) தங்களின் நடுநிலைமையை கைவிட்டு சமீபத்தில் நேட்டோவில் இணைந்தன.
ரஷ்யாவுடன் முழுமையான போர் வெடித்தால், ஜேர்மனி 200,000 இராணுவ வாகனங்களையும் 800,000 நேட்டோ துருப்புக்களையும் அதன் எல்லை முழுவதும் நகர்த்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியம் தனது படைகளை மீண்டும் கட்டியெழுப்பவும் உக்ரைனை ஆதரிக்கவும் ஒரு மகத்தான செலவினத் திட்டத்தையும் தொடங்கியுள்ளது.
மேலும், பாதுகாப்புக்கு என ஐரோப்பிய ஒன்றியம் சுமார் 800 பில்லியன் யூரோ தொகையை செலவிட முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்