ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka United States of America
By Raghav Aug 20, 2025 05:00 AM GMT
Report

ஈழத் தமிழர்களின் போராட்டத்தை தீர்க்கப்படாத காலணித்துவ பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்க (United States) தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 

பல தசாப்தங்களாக செயலற்ற தன்மை காரணமாக, இனப்படுகொலைக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

2025 ஆகஸ்ட் 17, என்ற திகதியிடப்பட்ட ஒரு கூட்டுக் கடிதத்தில், உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு , இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தமது கோரிக்கையை முன்வைத்துள்ளன.

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் இரத்து - வெளியானது அறிவிப்பு

சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் இரத்து - வெளியானது அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலை

எனவே மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், தோல்வியடைந்த தீர்மானங்களுக்கு கொள்கை ரீதியான புதிய அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளுமாறு, குறித்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. 

ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள் | Us Demands Recognition Of Eelam Tamil Issue

இந்தநிலையில் 2009 முதல் பேரவையின் தீர்மானங்களை இலங்கை தொடர்ந்து நிராகரிப்பதை இந்த அமைப்புகள் கண்டித்துள்ளன, மேலும் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்குப் பின்னர் பதினாறு ஆண்டுகளில் எந்தவொரு உறுதியான பொறுப்புக்கூறலையும் வழங்க பேரவையினால் இயலாமல் போயுள்ளமை குறித்தும், அமெரிக்க தமிழ் அமைப்புக்கள்,தமது ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

இது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் செயல்முறையில் தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை கடுமையாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக அமெரிக்க அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன. 

செம்மணிப் புதைகுழிகள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி தளத்தின் ஒரு பகுதியான சிந்துப்பாத்தியில் 140 க்கும் மேற்பட்ட என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி, சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையை, அமெரிக்க தமிழ் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

இந்தவிடயம், சுயாதீனமான சர்வதேச தடயவியல் விசாரணைகளுக்கான அவசரத் தேவையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பேலியகொடையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்

பேலியகொடையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்

மனித உரிமைகள் ஆணையம்

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் மைய அரசியல் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

ஈழத்தமிழர் பிரச்சினை அங்கீகரிக்குமாறு கோரும் அமெரிக்க அமைப்புகள் | Us Demands Recognition Of Eelam Tamil Issue

இலங்கையின் 1948 ஆம் ஆண்டு சுதந்திர செயல்முறை "முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்கம் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்க தமிழ் அமைப்புக்கள், பிரித்தானியர்கள், 1948 இல் தமிழர்களிடமிருந்து எந்த ஆணையையும் கோராமல் சிங்களவர்களிடம் அதிகாரத்தை ஒப்படைத்தனர் என்று தெரிவித்துள்ளன.

அதாவது தமிழ் தேசத்திற்கான சுயநிர்ணயக் கொள்கையை நிலைநிறுத்தத் தவறிய ஒரு முறையற்ற மற்றும் முழுமையற்ற காலனித்துவ நீக்க செயல்முறையை மேற்கொண்டனர் என்றும் அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனவே சர்வதேச நீதிமன்றத்தின் முன் மொரீசியஸ் வழக்குடன் இணையாக, இந்த வரலாற்று அநீதியை சரிசெய்ய ஐ.நா.வுக்கு அதிகாரமும் பொறுப்பும் உள்ளதாக அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் வாதிட்டுள்ளன.

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் - குவியும் மக்கள்

நகரும் 113 ஆண்டுகள் பழமையான தேவாலயம் - குவியும் மக்கள்

ரஷ்ய ஜனாதிபதி புடினின் கைது..! சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு

ரஷ்ய ஜனாதிபதி புடினின் கைது..! சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி